>

ad

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பகலுணவு வழங்கும் திட்டம்.

மாணவர்களுக்கான உணவுக்காக 4 பில்லியன் நிதி ஒதுக்கம்.

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் உள்ளடங்குகின்ற அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்காக பகல் உணவு வழங்குகின்ற செயற்திட்டம் ஒன்று ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

கொடஹேன குமார வித்தியாலயத்தில் 15 ஆம் திகதி நடைபெற்ற வைபவம் ஒன்றின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு போதுமான உணவு  கிடைக்கப்பபெறுவதில்லை என்பதனை சில தினங்களுக்கு முன்னர்  பாராளுமன்றத்தில் வைத்து அமைச்சர் ஏற்றுக்கொண்டிருந்தார். பகலுணவுத் திட்டத்திற்காக அரசாங்கமனது  ரூபா 4 பில்லியன் நிதி ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.